தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
கடந்த 2013-ம் ஆண்டு அரசன் என்ற பெயரில் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருந்த புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார் சிம்பு. இந்தப் படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, ஐம்பது லட்சம் ரூபாய், முன் பணமாக கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த படத்தில் சிம்பு முன்பணத்தை பெற்று கொண்டு படத்தில் நடிக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக வாங்கிய முன் பணத்தையும் சிம்பு திருப்பி தரவில்லை. இதனால் கொடுத்த முன் பணத்தை திரும்ப வசூலிக்கும் வகையில் பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறித்த காலத்தில் பட தயாரிப்பு பணிகளை துவங்காததால், தனக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டதாகவும், அதனால் முன் பணத்தை முடக்க வேண்டும் என சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் படப் பணிகள் துவங்காததால் இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சிம்பு தரப்பு சமர்ப்பிக்க வில்லை எனக்கூறி, முன்பணமாகப் பெற்ற 50 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து, 85 லட்சம் ரூபாய்க்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என, சிம்புவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். நான்கு வாரங்களில் இந்த தொகையை வழங்காவிட்டால் சிம்புவுக்கு சொந்தமான வீட்டு உபயோகப் பொருட்கள் ஜப்தி செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அரசன் படத்தின் இயக்குனர் நாராயணன் அளித்துள்ள விளக்கம் வருமாறு: நான் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தை முடித்து இரண்டாவதாக ஒரு கதை தயார் செய்தேன். இக்கதைக்கு சிம்புதான் சரியான நடிகர் என்று தோன்றியதால். சிம்புவை வைத்து இயக்கவேண்டும் என்று சிம்புவிடம் சென்றேன்.
சந்திப்பிற்காக அனுமதி கேட்ட மறுநாளே என்னை சந்தித்து முழு கதையையும் கேட்டார். அதன் பிறகு அவரின் ஆர்வம் இக்கதையின் மீது அதிகமாக இருந்ததால் பல ஆலோசனைகள் கொடுத்தார்.
அரசன் ஒரு தலைவரின் கதை என்பதால் அதை நேர்த்தியாக செய்ய கால அவகாசம் தேவைப்பட்டது அதேபோல் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் என்றாலும் தயாரிப்பாளரும் கதைமீது நம்பிக்கை கொண்டார்கள். தயாரிப்பாளர் மற்றும் சிம்பு இருவருமே எனக்கு பக்க பலமாக இருப்பதால் நான் நம்பிக்கையோடே சில வருடங்கள் பயணித்தேன்.
ஆனால் ஏதோ ஒன்றால் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று எண்ணி நான் வேறுகதை தயார் செய்ய சென்றேன். விரைவில் அழைப்பார்கள் நான் இப்படத்தை ஆரம்பிப்பேன் என நம்பி இருந்தேன். இருவருமே நல்வர்கள் ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை. ஆனால் சிம்புவை மட்டும் எல்லோரும் குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு இக்கதைஉருவாக எல்லா நேரங்களிலும் பக்க பலமாக இருந்தார்கள் இருவரும். காலம் இரண்டு நல்ல மனிதர்களை வெவ்வேறு துருவத்தில் நிறுத்தி பார்க்கிறது.
என் படம் ரிலீஸ் ஆகி நல்ல படம் என பெயர் வரும் என்றிருந்த எனக்கு நீதி மன்றம் மூலம் என் படத்தின் பெயர் வெளிவருவது மிகப்பெரிய வருத்தம்தான். ஆனால் என் வாழ்நாளில் ஒருபடமேனும் சிம்புவுடன் பணிபுரிவேன் . என்கிறார் நாராயணன்.