ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் தனது குழுவினருடன் இசை சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த 18ந் தேதி தொடங்கிய இந்த இசைப் பயணம், லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, வாஷிங்டன், உள்பட 9 நகரங்களில் நடந்தது.
இறுதி நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் மனோ, ஹரிச்சரன், நீத்தி மோகன், உதித் நாராயணன், ஜாவேத் அலி, ஆகியோர் கலந்து கொண்டு பாடினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் தனது குழுவின் சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார். அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் வரை கைதட்டினார்கள். பின்னர் ஒரு கோடிக்கான காசோலையின் மாடலை தனது குழுவினருடன் இணைந்து காட்டினார். இந்த தொகை கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இதுதவிர கேரள மக்களின் வெள்ள நிவாரண நிதிக்கென்று தனி நிகழ்ச்சி ஒன்றையும் ரஹ்மான் நடத்துகிறார். வருகிற 9ந் தேதி புளோரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரட்டப்படும் நிதி அனைத்தையும் கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்குகிறார் ரஹ்மான்.