600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஆணவக் கொலையை மையமாக வைத்து ' தொட்ரா' என்ற பெயரில் படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. ப்ரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதியிருக்கும் வீணா என்ற பெண், கதாநாயகியாகி இருக்கிறார்.
தான் நடிக்க வந்தது குறித்து வீணா கூறியதாவது:
நடிக்க வருவதற்கு முன் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். யு.பி.எஸ்.சி., தேர்வெழுதி ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது லட்சியம். அதற்காக, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுத சென்றேன். அப்பத்தான், தொட்ரா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, கதை மிகவும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். முதல்நாள் படப்பிடிப்புக்கு எனது அம்மா வந்திருந்தார். ஆனால், தயாரிப்பாளர் ஜெயச்சந்திர
காட்டிய அக்கறையை கண்டு நெகிழ்ந்த என் அம்மா, இனி உனக்கு யாரும் பாதுகாப்புக்கு என்று தனியாக தேவைப்படாது என்று சொல்லி விட்டு, ஊருக்குச் சென்று விட்டார். பிருத்வி பாண்டியராஜனோடு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதால், படக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.