ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். 'சென்னை 28 - 1, 2, மங்காத்தா' என வசூல் ரீதியான வெற்றிப் படங்களையும் கொடுத்தவர். 'சென்னை 28 பார்ட் 2, ஆர்கே நகர்' ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். அவருடைய மூன்றாவது தயாரிப்பாக சிம்புதேவன் இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புதேவன், வடிவேலு நாயகனாக நடிக்கும் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தை இயக்க ஆரம்பித்தார். ஆனால், அந்தப் படத்தில் நடிக்க முடியாதென வடிவேலு சொன்னதால் அதற்கான பஞ்சாயத்து கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அது இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டேயிருக்கிறது.
இதனிடையே, சிம்புதேவன் வேறு ஒரு கதையைச் சொல்லி வெங்கட்பிரபுவிடம் சம்மதம் வாங்கிவிட்டாராம். தற்போது அந்தப் படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. விரைவில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என அறிவிப்பு வரலாம். குறுகிய காலத் தயாரிப்பாக இந்தப் படம் தயாராக உள்ளதாம்.