டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா நடித்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளிவந்து ஆச்சரியப்பட வைத்துள்ளன. 'கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களிலும் நயன்தாரா தான் நாயகி, நாயகன் எல்லாமே. அவரை நம்பித்தான் இந்தப் படங்களின் வியாபாரம் சில பல கோடிகளுக்கு நடந்திருக்கிறது. தற்போது 'விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம்' என இரண்டு படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க 'கொலையுதிர் காலம்' படம் ஆரம்பமானது. ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஏன் நடக்கவில்லை என்பது ரகசியமாகவே இருக்கிறது. இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் முதன்முதலில் ஆரம்பமான படம் இதுதான். அதன்பிறகுதான் அவர் 'பியார் பிரேமா காதல்' படத்தைத் தயாரித்தார்.
கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்', அஜித் நடித்த 'பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி தான் 'கொலையுதிர் காலம்' படத்தின் இயக்குனர். நயன்தாராவிற்கு தற்போது இருக்கும் வியாபாரத்தை வைத்தாவது அந்தப் படத்தை மீண்டும் ஆரம்பிப்பார்களா அல்லது அப்படியே கிடப்பில் போட்டுவிடுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.