சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'யு டர்ன்'. 2016ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை பவன்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தைப் பார்த்ததும் அதன் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டு சமந்தா படத்தின் உரிமையை வாங்கியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் வாங்கவில்லை படத்தில் நடிக்க மட்டும் செய்கிறார் என பின்னர் தகவல் வெளியானது.
கன்னடத்தில் படத்தை இயக்கிய பவன்குமார் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என அறிவிக்கப்பட்டது. அதனால், இரண்டு மொழிகளுக்கும் பொதுவான நடிகர்களை படத்தில் நடிக்க வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆதி, ராகுல் ரவீந்திரன் ஆகியோர் படத்தில் சமந்தாவிற்கு அடுத்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பொதுவாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்படும் படம் என்றால் அதில் ஏதாவது ஒரு மொழியில் மட்டும்தான் பல காட்சிகளை எடுப்பார்கள். சில காட்சிகளை ஒரே மொழியில் மட்டும் எடுத்து ரசிகர்களையும் ஏமாற்றுவார்கள். 'பாகுபலி' படங்கள் கூட அப்படி எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால், 'யு டர்ன்' படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே தனித் தனியாகப் படமாக்கியிருக்கிறோம் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.