இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சினிமாவில் யாருக்கு எப்போது எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு தாமதமாகக் கிடைத்தாலும் சரியான வாய்ப்பாக அமையும். அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் சினிமாவிலும் முன்னேறுவார்கள்.
நடன நடிகர்களில் ஒருவராக இருந்து பின்னர் நடன இயக்குனராக உயர்ந்து 2006ம் ஆண்டில் வெளிவந்த 'தூத்துக்குடி' படம் மூலம் நாயகனாக உயர்ந்தவர் ஹரிகுமார். பின்னர் 'திருத்தம், மதுரை சம்பவம், போடிநாயக்கனூர் கணேசன், காதல் அகதீ' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதில் 'திருத்தம்' படத்தில்தான் பொன்ராம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர்தான் அவர் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' ஆகிய படங்களை இயக்கினார்.
ஹரிகுமார் இப்போது இயக்குனராகவும் மாறியிருக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், பிரபுதேவா நாயகனாக நடிக்க உள்ள 'தேள்' படத்தை இயக்குவதன் மூலம் அவர் இயக்குனராகிறார்.
நடன நடிகர்களில் ஒருவராக இருந்து நடன இயக்குனராகி, நடிகராகி, இயக்குனர் ஆனவர்களின் வரிசையில் முதலில் இடம் பெற்ற பிரபுதேவாவை அந்த வரிசையில் வந்துள்ள ஹரிகுமார் இயக்குவது குறிப்பிட வேண்டிய ஒன்று.