ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்து விட்ட சிம்பு, அடுத்தப்படியாக வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சிம்புவிற்கு புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு, பேசன் மூவி மேக்கர்ஸ் என்று நிறுவனம் சிம்புவை வைத்து அரசன் படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்தது. இதற்காக அவருக்கு முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டது. இதுநாள் வரை படம் தொடங்கப்படவில்லை. சிம்பு கால்ஷீட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுத்த முன்பணத்தை திருப்பி கேட்டுள்ளது. ஆனால் சிம்பு பணத்தை தரவில்லை. இதையடுத்து சிம்பு மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம். சிம்பு வாங்கிய முன்பணத்தை வட்டியுடன் சேர்த்து தரும்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிம்பு தன் தரப்பு நியாயத்தை கூறினார். அதாவது சரியான நேரத்தில் படத்தை தொடங்கவில்லை என்றார். ஆனால் நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. 4 வாரங்களுக்குள் சிம்பு ரூ.50 லட்சம் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.85 லட்சமாக பேசன் மூவி நிறுவனத்திற்கு வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் கார், செல்போன் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என எச்சரித்துள்ளது.