ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் நடிப்பது தெரிந்த செய்திதான். அவர் மட்டுமல்ல, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
ஊட்டியில் கதை நிகழும் இந்தப் படத்தின் ஷூட்டிங், டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் கடந்த சில நாட்களாக ரஜினி, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
முக்கியமாக, ரஜினி படத்தின் வில்லனான விஜய் சேதுபதிக்குமான அதிரடியான சண்டைக்காட்சி படம் பிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பின்னி மில்லில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. தொடர்ந்து, லடாக்கில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இப்படத்தின் கதை ஊட்டியில் நடைபெறுகிறது. அங்கு எடுக்க வேண்டிய காட்சிகளைத் தான் ஏற்கனவே டேராடூன், டார்ஜிலிங்கில் படமாக்கினார் கார்த்திக் சுப்பராஜ். அடுத்து லடாக்கில் எடுக்கப்பட உள்ள காட்சிகளும் ஊட்டியில் நடைபெறும் காட்சிகளைத்தானாம். ரஜினியை ரசிகர்களின் தொல்லையிலிருந்து காப்பாற்ற கார்த்திக் சுப்பராஜ் போட்ட திட்டம் தான் இது.