டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று படங்களில் இணைந்து நடித்தவர் சமந்தா. இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற நிலையில், அடுத்தபடியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் சமந்தா நாயகியாக நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை தான். இருப்பினும், அவரது புதிய படத்தில் நடிப்பது சம்பந்தமாக யாரும் என்னை அணுகவில்லை. விஜய்யுடன் மூன்று படங்களில் நடித்துள்ள நான் அஜித்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அதன்காரணமாக அஜித் ரசிகர்கள் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில், மீண்டும் நான் விஜய்யுடன் நடிப்பதாக தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என என கூறியுள்ளார்.