ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா அதன்பிறகு தானும் ஹீரோவாகி சில படங்களை இயக்கி நடித்தவர், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வந்தார். அதோடு, ஸ்பைடர், மெர்சல் படங்களில் வில்லனாக நடித்தார்.
இந்நிலையில், தற்போது அவர் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்.
இந்த படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து தான் நடிக்கயிருப்பதை தெரிவித்தார் எஸ்.ஜே.சூர்யா. மேலும் இந்த படம் தமிழ், இந்தியில் தயாராகிறது. ஆக, இப்படம் மூலம் அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகிறார். நான் இந்தியில் அறிமுகமாகிறேன் என்றார்.
மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்தை வெளியிட்டதாக சொல்லி ஒரு வீடியோவையும் ஒளிபரப்பினர். அதில் ரஜினி தோன்றி, உயர்ந்த மனிதன் படத்திற்கு வாழ்த்து சொன்னவர், எனது நண்பர் அமிதாப்பச்சன் தமிழ் சினிமாவிற்கு வருவதை வரவேற்கிறேன். அவரால் தமிழ் சினிமாவுக்கு பெருமை கிடைக்கப்போகிறது என்று கூறினார்.