சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
தமிழ் சினிமா உலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்டவர் ஹன்சிகா. அவருக்கு தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு ஆகியோருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவரது ஐம்பதாவது படமாக 'மகா' என்ற படம் விரைவில் தயாரிக்கப்பட இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் அந்தப் படம் குறித்தும், பொதுவான விஷயங்கள் குறித்தும், ஹன்சிகா கூறியதாவது:
இப்பதான் சினிமாவுக்கு வந்த மாதிரி இருக்கும். இதோ ஐம்பதாவது படத்தில் நடிக்கப் போகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. 'மகா' படத்தில் கதாநாயகிக்குத்தான் கதைப்படி முக்கியத்துவம். இப்படிப்பட்ட படத்தில் நடிப்பதும் பெருமைதான்.
நான் வெற்றிகரமான நடிகைதான் என்பதை மீண்டும் நிரூபிப்பேன். அதற்காக நான் எவ்வளவு கடுமையாக உழைக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும் விரைவில் வெளியிலும் தெரியும். மிக நெருக்கத்திலேயே, சினிமாவில் உச்சத்தையும் தொடுவேன்.
எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்கிறவர்கள், அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன் என்றால், நான் கடந்த ஆண்டு மட்டும் 18 முதல் 19 பட வாய்ப்புகளை மறுத்துள்ளேன். காரணம், கதை எனக்குப் பிடிக்கவில்லை. ஆண்டுக்கு 8 படம் பண்ணிக் கொண்டிருந்த நான், இனி, 4 படங்கள் நடித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
ஓவியம் வரைவது எனக்கு பிடிக்கும். நேரம் கிடைத்தால், நன்கு வரைவேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.