இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரே ஒரு கண் சிமிட்டலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து, புருவ அழகி என பெயர் வாங்கிய ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிரான வழக்குகளை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில், புருவத்தை அழகாக அசைத்து கண் சிமிட்டி, ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். இவரது கண் சிமிட்டலுக்காகவே அந்தப் பாடல் காட்சி இணையத்தில் வைரலானது.
ஆனால், அந்தப் பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ப்ரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பு யார் மனதையும் புண்படுத்தவில்லை. யாரையும் அவமதிக்கவில்லை என்று குறிப்பிட்டது. மேலும், ப்ரியா வாரியர் மீது நடவடிக்கை கோரும் அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.