'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜி.வி.பிரகாஷ், சுரபி நடித்துள்ள படம் அடங்காதே. இவர்களுடன் சரத்குமார், மந்திராபேடி, முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். எம்.எஸ்.சரவணன் தயாரித்துள்ள இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்புகள் காசி உள்ளிட்ட பல புண்ணிய ஸ்தலங்களில் நடந்துள்ளது. இது மத கலவரத்தால் பாதிக்கப்படும் ஒரு இளைஞன் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பது மாதிரியான கதை. இதில் சரத்குமார் அரசியல்வாதியாகவும், மந்த்ராபேடி போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஜாதி, மத கலவர காட்சிகள் இருந்தது. இதற்கு ஒரு சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தனக்கு தினமும் போனில் மிரட்டல் வருவதாக சொல்கிறார் இயக்குன் சண்முகம் முத்துசாமி அவர் மேலும் கூறியதாவது:
இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை. கோவை குண்டுவெடிப்பு, கோத்ரா ரெயில் எரிப்பு என இந்தியா முழுவதும் நடந்த பெரிய கலவரங்கள் படத்தில் இடம்பெறுகிறது. பிரச்சினைகள் வரும்போது பயந்து ஓடாமல், அடங்காமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதே படத்தில் சொல்லப்படும் மெசேஜ். மற்றபடி யார் பக்கமும் படம் நின்று பேசாது. அதை புரிந்து கொள்ளாமல் தினமும் யார் யாரோ போன் செய்து மிரட்டுகிறார்கள். ஹவாலா பணத்தில் படம் தயாரிக்கிறாயா? படத்தை எப்படி வெளியிடுகிறாய் என்று பார்க்கலாம். என்பது மாதிரி நிறைய மிரட்டுகிறார்கள். படம் வெளிவரும்போது எல்லா உண்மையும் தெரிய வரும். என்கிறார் சண்முகம் முத்துசாமி.