ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் ஊர காணோம். பிர்லா ஷா, பவித்ரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பி.ஆர்.ஏ ஆனந்த் இயக்குகிறார். கே.எஸ் சரவணகுமார் வேலவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் 22 வயதே ஆன பெண் இசை அமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அறிமுகமாகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:
என் தந்தை சத்யராஜ் லைட் மியூசிக் வைத்து நடத்தி வந்தார். நிறைய ஆல்பங்களுக்கு இசை அமைத்தார். சினிமா இசை அமைப்பாளராக வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு, அது ஊர காணோம் படத்தில் நிறைவேறியது. நானும் இசை அ மைப்பாளராக வேண்டும் என்று என்னை சவுண்ட் என்ஜினீயரிங் படிக்க வைத்தார். படித்து முடித்து விட்டு அப்பாவுக்கு உதவியாக இருந்தேன்.
ஊர காணோம் படத்துக்கு இசை அமைக்கத் தொடங்கியபோதே அப்பா திடீரென இறந்து விட்டார். இந்த படத்துக்கு இசை அமைத்து தர அப்பா தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்திருந்தார். அந்த வாக்கை நிறைவேற்ற நானே இசை அமைப்பாளராகிவிட்டேன். அப்பா எனக்கு கற்றுக் கொடுத்த இசையைக் கொண்டு நான் இசை அமைத்திருக்கிறேன். பிரியா கிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண் கவிஞர்கள் பாடல்களை எழுதி உள்ளார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து படங்களுக்கு இசை அமைப்பேன். என்கிறார் சந்திரா சத்யராஜ்.