டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் மணிரத்னம் செக்க சிவந்த வானம் படத்தை அறிவித்த சமயத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரில் கூட அவர் படம் இடம் பெற்று இருந்தது. ஆனால் கால்ஷீட் சிக்கல் காரணமாக அவர் விலகவே, அந்த கேரக்டரில் தற்போது அருண் விஜய் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் இருந்து விலகியதற்கு கால்ஷீட் காரணம் இல்லை என தற்போது பஹத் பாசில் கூறியுள்ளார். இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை மணிரத்னம், பஹத் பாசிலிடம் சொன்னபோது அதை அவரால் மனதில் விஷுவலாக காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லையாம்.
இதுபற்றி சில நாட்கள் குழப்பத்திலேயே இருந்து வந்த பஹத் பாசில், கடைசியில் துணிந்து தனது முடிவை மணிரத்னத்திடம் சொன்னாராம். மணிரத்னம் தனது எண்ணத்தை புரிந்து கொண்டிருப்பார் என தான் நம்புவதாக கூறும் பஹத் பாசில், இதேபோல கடைசி நேரத்தில் முடிவெடுத்து சில படங்களில் இருந்து விலகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.