ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான அடல்ட் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த இந்தப்படத்தில் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர்.
கடந்த மே மாதம் வெளியான இந்தப் படம், ஆபாசப்படமாக இருந்ததால் பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு எதிராகப் பலரும் போர்க்கொடி தூக்கினர். அதேசமயம், இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதோடு, நல்ல லாபத்தையும் தந்தது.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தைத் தொடர்ந்து 'கஜினிகாந்த்' என்ற படத்தை இயக்கினார் சந்தோஷ் பி ஜெயக்குமார். 'கஜினிகாந்த்' வணிக ரீதியில் தோல்வியடைந்தது. இந்நிலையில், 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
ஆதித் அருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவே தயாரிக்கிறார்.