தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஜெயசுதா. அதைத்தொடர்ந்து பெத்த மனம் பித்து, பாரத விலாஸ் என பல படங்களில் நடித்த அவர், அவ்வப்போது அம்மா கேரக்டரில் நடித்து வந்தார். நீண்ட இடைவேளைக்குப்பிறகு கார்த்தி நடித்த தோழா படத்தில் ரீ-என்ட்ரியானார்.
தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய் ஆகியோரின் அம்மாவாக நடித்துள்ளார்.
இதுபற்றி ஜெயசுதா அளித்துள்ள ஒரு பேட்டியில், 18 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் படத்தில் நடித்துள்ளேன். அவரது படப்பிடிப்பு தளம் ஆரம்ப காலத்தில் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறது. அதோடு, ஒவ்வொரு காட்சிகளையுமே தனக்கான பாணியிலேயே படமாக்குகிறார். அந்த வகையில், அவரது தரம் அப்படியே மாறாமல் இருக்கிறது. தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி படங்கள் வரை நடித்துள்ள எனக்கு மீண்டும் மணிரத்தினம் படத்தில் நடித்தபோது ஒரு புதுமுக நடிகை போன்ற உணர்வு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார் ஜெயசுதா.
2000-மாவது ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே படத்தில் நடித்திருந்தார் ஜெயசுதா.