அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா மற்று அவரது பிறந்த நாள் விழாவும் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றியதற்கான அறிவிப்பை வெளியிட்ட விஷால், அதற்கான கொடியினையும் அறிமுகம் செய்தார்.
இந்த விழாவில் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களுக்கும் கேடயம் வழங்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கு மட்டும் கேடயம் வழங்கப்படவில்லை.
அதுகுறித்து விஷால் கூறுகையில், கனடாவில் அக்சயா என்ற எனது ரசிகை ஒருவர் இருக்கிறார். கண் பார்வையில்லாத அவர், நான் நடித்த 24 படங்களையும் காதுகளால் கேட்டுள்ளார். அதனால் எந்த படத்தின் வசனத்தை சொன்னாலும் அந்த படத்தின் பெயரை சொல்லி விடுவார்.
அதனால் அப்படிப்பட்ட ரசிகையின் கையினால் இரும்புத்திரை படத்தின் கேடயத்தை பெற்றால் மிகப்பெரிய விருது பெற்ற மகிழ்ச்சி கிடைக்கும் என்று கருதினேன். அதன்காரணமாக நேற்றே சென்னை வந்த அவரது கையினால் எனக்கான கேடயத்தை பெற்றுக்கொண்டடேன் என்று கூறினார்.