அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் இராஜாவின் பார்வை இராணியின் பக்கம். விகாஷ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், லியாண்டர் லீ மார்டின் இசை அமைத்துள்ளார். அழகுராஜ் இயக்கி உள்ளார்.
இதில் ஆதவா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே 8 பேக் வைத்து நடித்திருக்கிறார். மலையாள நடிகை அவந்திகா ஹீரோயின். இவர்களுடன் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் அழகுராஜ் கூறியதாவது:
தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அதன்பின் நடக்கும் விஷயங்களை காமெடியாக சொல்லுகிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
கதைப்படி, படத்தில் நாயகன் 6 பேக்ஸ் உடல் கட்டுடன் இருக்க வேண்டும். ஆனால் நடிக்க தேர்வான ஆதவா 4 மாதம் கடுமையாக பயிற்சி எடுத்து 8 பேக்குடன் வந்து நின்றார். முன்னணி ஹீரோக்களுக்கு சவால்விடும் வகையில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். படம் வருகிற செப்டம்பர் 7 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும். என்றார் இயக்குனர் அழகுராஜா.