டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஸ்ரேயா நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் நரகாசூரன். இதன் அனுபவம்
குறித்து அவர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி : நரகாசூரன் சஸ்பென்ஸ்
த்ரில்லர் படம். அரவிந்த்சாமி, நான், சந்தீப், ஆத்மிகா, இந்திரஜித்
எல்லோரும் ஓர் இடத்தில் சந்திக்கும் விஷயங்கள் தான் படம். இது இயக்குநர்
படம், அழகாக கதை அமைத்து எடுத்துள்ளார். படம் முழுக்க ஊட்டியில்
எடுக்கப்பட்டது.
முதல் 10 நிமிடங்களிலேயே என்ன மாதிரியான கதை என புரிந்து விடும். படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது. அப்படியொரு கதை. சில தினங்களுக்கு முன் படம் பார்த்தேன். ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எனக்கும் மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது. முதன்முறையாக அரவிந்த்சாமி ஜோடியாக நடித்திருக்கிறேன். அவருடன் நடித்த முதல் காட்சி மறக்க முடியாதது. திறமையான நடிகர். சினிமா பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்.
எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். யோகா, தியானம் செய்கிறேன், நிறைய ஊர்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன், ரசிக்கிறேன். இவையே நான் இளமையாக இருக்க காரணம். சென்னையில் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் சாப்பிங் செய்ய பிடிக்காது.
காஞ்சி பட்டு புடவைகள் மட்டும் நிறைய வாங்குவேன். முகம் தெரியாதவர்களின் உழைப்பிற்கு மரியாதை செய்யும் விதமாக புடவை வாங்குகிறேன். என் திருமண வாழ்க்கை தனிப்பட்ட விஷயம், அதை பொது வெளியில் பேச விரும்பவில்லை.
நான் இறக்கும் வரை சினிமாவில் நடிக்க வேண்டும். இது தான் என் கனவு. டான்ஸ் தொடர்புடைய ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். என்னால் தமிழை நன்றாக புரிந்து கொள்ள முடியும், சரளமாக பேச முடியாது. விரைவில் நான் நடித்த தெலுங்கு படம் ஒன்று வெளியாக இருக்கிறது. தற்போது ஹிந்தியில் ஒரு படம் நடித்து வருகிறேன். நல்ல தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.