பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சினிமா பிரபலங்கள் அரசியல் களத்தில் குதிப்பது புதிதல்ல, அந்தவகையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா தொடங்கி, சமீபத்தில் குதித்த ரஜினி, கமல் வரை பலரை சொல்லலாம். இவர்கள் வழியில் அடுத்ததாக அரசியல் களத்தில் விஜய், விஷால் ஆகியோர் களமிறங்க உள்ள நிலையில் நடிகர் விஷால் இன்று(ஆக., 29) அதற்கான அச்சாரத்தை அமைத்துள்ளார்.
விஷாலுக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாள் விழா, இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா, மற்றும் நற்பணி மன்றத்தை புதிய அமைப்பாக மாற்றுதல் என முப்பெரும் விழாவாக சென்னையில் இன்று கொண்டாடினர் விஷால். இதில், தன் புதிய அமைப்புக்கான பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார்.
தன் இயக்கத்திற்கு மக்கள் நல இயக்கம் என பெயர் வைத்திருக்கிறார். கொடியின் மேலே விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி என்ற வாசகத்துடன் அன்னை தெரஸா மற்றும் அப்துல் கலாமின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. கொடியின் மையத்தில் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என அச்சிடப்பட்டுள்ளது. நடுவில் விஷாலின் முகம் வெற்றிக்கான குறி உடன் இடம் பெற்று இருக்கிறது.
விஷால் பேசியதாவது : அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பது. ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது பிணத்திற்கு சமம் என்றார்.