தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாதாரணமாக திரைப்படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹீரோக்கள் என்ட்ரி கொடுக்கும் போதுதான் அங்கு கூடியிருக்கும் ரசிகர்கள் அரங்கமே அதிலும் அளவுக்கு பலத்த கரகோஷம் கொடுப்பார்கள். ஆனால் அதே கரகோஷம் தற்போது யோகிபாபு அரங்கத்திற்குள் என்ட்ரி கொடுத்ததுமே கிடைக்கிறது.
அந்த வகையில், கோலமாவு கோகிலா படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்தபோதும் அப்படித்தான் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து சமீபத்தில் அடங்காதே படத்தின் ஆடியோ விழாவிற்கு வந்தபோதும் யோகிபாபு அரங்கத்திற்குள் வந்ததுமே பலத்த கைதட்டல் ஒலித்தது. அதன்பிறகு அவர் மைக் முன்பு வந்தபோது, சில நிமிடங்களாக ஒலித்த கரகோஷத்தினால் பேச முடியாமல் நெகிழ்ந்து போய் நின்றார் யோகிபாபு.
அதோடு, நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல அதற்குள்ளாக கைதட்டுகிறீர்களே என்று அவர் ரசிகர்களைப்பார்த்து கேட்க, அப்போதும் கைதட்டல் அரங்கத்தை அதிர வைத்து. தனக்கு ரசிகர்கள் கொடுத்த இந்த வரவேற்பைப்பார்த்து சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திணறிப்போய் நின்றார் யோகிபாபு.