ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மேற்குத் தொடர்ச்சி மலை என்ற தரமான படத்தைக் கொடுத்த இயக்குனர் லெனின் பாரதிக்கு குவியும் பாராட்டுக்கள் அந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த விஜய் சேதுபதிக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனக்கு அந்தப் பெருமை வேண்டாம் என வெளிப்படையாகப் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.
இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள விமர்சனத்திற்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி கூறினர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, “இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குப் பிடிக்கவில்லை. படத்தை வெளியிடவும் முடியவில்லை.
யாரும் படத்தை வாங்க வராததே அதற்குக் காரணம். சரி வந்த விலைக்கு 70 லட்சம் குறைத்துக் கொண்டாவது படத்தைக் கொடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன். ஒருவர் வந்து அட்வான்ஸ் கொடுத்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அந்தப் பணத்தை திரும்ப வாங்கிச் சென்றுவிட்டார். பின்னர்தான் சரவணன் இந்தப் படத்தை வெளியிட முன் வந்தார். இந்தப் படம் வெளியானதற்கு அவர்தான் காரணம். இந்தப் படத்திற்காக ஒரு பைசா கூட வாங்காமல் படத்தைக் கொடுத்துவிட்டேன்.
படத்தின் இயக்குனர் லெனின் பாரதி மிகவும் நேர்மையானவர். நான் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த காலத்திலேயே அவருடன் நட்பு உண்டு. அவருடைய நேர்மைக்காகத்தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன். இந்தப் படத்தை அவர்தான் கடைசிவரை சுமந்து கொண்டிருந்தார். அதனால், இந்தப் படத்திற்காகக் கிடைக்கும் பாராட்டுக்கள் அவருக்குத்தான் போய்ச் சேர வேண்டும். இந்தப் படத்தைத் தயாரிதேன் என்ற பெருமை கூட எனக்கு வேண்டாம்.
இன்று படத்தைப் பார்த்து நீங்கள் அனைவரும் பாரட்டுகிறீர்கள். எனது படங்களை நீங்கள் விமர்சிக்கும் போது நான் கோபப்பட்டதுண்டு. இவர்களுக்கு சினிமாவைப் பற்றி என்ன தெரியும், இப்படி விமர்சிக்கிறார்கள் என்று கோபப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை நீங்கள் பார்த்த பார்வை, பாராட்டியவிதம் ஆகியவற்றைப் பார்த்த போது எனது எண்ணங்களுக்கு செருப்படியாக இருந்தது. சினிமா பற்றிய எனது பார்வையையும் உங்களது விமர்சனம் மாற்றியிருக்கிறது.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆண்டனி, நன்றாக வர வேண்டும். என்னைவிடவும் வளர வேண்டும், அவ்வளவு திறமைசாலி. அவருக்கும் உங்களது ஆதரவு வேண்டும்,” என்றார் விஜய் சேதுபதி. நேற்றைய நன்றி அறிவிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமான கண்ணீர் மல்க நடந்த நிகழ்வாக நடந்தது. பலரும் உணர்ச்சிப் பெருக்கால் பேச முடியாமல் நா தழுதழுக்கப் பேசினர்.
இந்தப் படத்திற்கு மேலும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும், நல்ல வசூல் கிடைக்க வேண்டும் என்பதுதான் படக்குழுவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.