ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் சமீபத்திய பெரிய மல்டி ஸ்டார் படம் என்ற பெருமையை செக்கச் சிவந்த வானம் பெற்றுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதரி, டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், ஜெயசுதா என பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம் சில பல உள்குத்து போட்டிகளையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும், யாருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும், யாருடைய நடிப்பு பிரமிக்க வைக்கும் என பலரும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மேலும், படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களின் ரசிகர்கள் அவர்கள் அபிமான நாயகன்தான் டாப் என ஒரு சர்ச்சைப் பாதையை நோக்கியும் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள். மணிரத்னம் படம் என்றாலே படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அது பற்றிய பரபரப்பும், பேச்சும் மிக அதிகமாகவே இருக்கும். அது இந்தப் படத்திற்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.
படம் வெளிவருவதற்குள் செக்கச் சிவந்த வானம் எத்தனை பேரை சிவக்க வைக்கப் போகிறதோ ?.