'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடு, உடமைகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அவர்களில் அதிகபட்சமாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி தனது தாயார் கண்மணியுடன் கேரளா சென்ற லாரன்ஸ், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து அறிவித்தபடி ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார். நிதியை பெற்றுக் கொண்ட முதல்வர் ராகவா லாரன்சுக்கு நன்றி தெரிவித்தார்.