பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடு, உடமைகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அவர்களில் அதிகபட்சமாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி தனது தாயார் கண்மணியுடன் கேரளா சென்ற லாரன்ஸ், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து அறிவித்தபடி ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார். நிதியை பெற்றுக் கொண்ட முதல்வர் ராகவா லாரன்சுக்கு நன்றி தெரிவித்தார்.