ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா (சைமா) கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டுக்கான 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா வருகிற செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15ந் தேதிகளில் துபாயில் நடக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 2017ம் ஆண்டு வெளியான படங்களிலிலிருந்து சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் விழா ஒருங்கிணைப்பாளர் பிருந்தா பிரசாத், நடிகர் ராணா, நடிகைகள் அஞ்சலி, ரைசா, குஷ்பு, நிக்கி கல்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த குறும்படமாக திறந்த புத்தகம் என்ற படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனராக ஆதித்யா அன்பு (தி பிரேக்அப்), சிறந்த நடிகராக விக்னேஷ்குமார் (திறந்த புத்தகம்) சிறந்த நடிகையாக காயத்ரி (அபயா) ஆகியோரும் தேர்ந்தெடுக்கபட்டனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.