விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் |
நகைச்சுவை நடிப்பில் மிகப்பெரிய சகாப்தமாக விளங்கியவர் நாகேஷ். அவருடைய மகன் ஆனந்தபாபு எண்பதுகளில் பாடும் வானம்பாடி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். அதன் பிறகு பட உலகைவிட்டே காணாமல்போனவர், சில வருடங்களுக்கு முன் இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
பின்னர் சமீபத்தில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகி ரைசாவின் அப்பாவாக நடித்தார். இதற்கிடையில் ஆனந்த்பாபுவின் மகனான பிஜேஷ் நாகேஷ் தன்னுடைய தாத்தாவைப் போலவே காமெடியனாக நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சந்தானம் நடித்து இன்னும் வெளிவராமல் கிடக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தில் சமையல் கலைஞராக நடித்துள்ள பிஜேஷ், பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் 'பொன் மாணிக்கவேல்' படத்தில் போலீஸாகவும் நடித்து வருகிறார். 'எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' என்ற படத்தில் விஞ்ஞானியாக நடிக்கிறார்.
பிஜேஷ் - நாகேஷின் முதல் பேரன். எனவே அவரது பெயரில், தனது பெயரும் சேர்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பிஜேஷ் - நாகேஷ் என்று பெயர் சூட்டினாராம். தாத்தாவின் பெயரை தன்னுடைய பெயருடன் வைத்திருப்பதால் அவரது பேரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே என்னுடைய கவலை என்கிறார் பிஜேஷ்.