ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கேராளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக புரட்டி போட்ட மழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து, மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீள துவங்கியுள்ளனர். வீடு வாசல் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோர், தங்கள் வாழ்வியலை எப்படி துவங்க போகிறோம் என மன ரீதியாக கலக்கத்தில் உள்ளனர்..
இவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களை தைரியப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் மம்முட்டி. வெள்ளத்தினால் அதிகம் பாதிப்புக்கு ஆளான செங்கண்ணூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தைரியமளிக்கும் விதமாக பேசி வருகிறார் மம்முட்டி.
மேலும் அங்கிருந்தவர்களிடம், "அரசிடம் இருந்து கிடைக்கும் நிவாரண உதவிகள் உங்களை வந்துசேர கொஞ்ச நாள் தாமதம் ஆனாலும் பொறுமை காக்க வேண்டும். மறுசீரமைப்பு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.