வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சின்னத்திரை நடிகையாக இருந்து மேயாதமான் படத்தின் மூலம் சினிமா நடிகை ஆனவர் பிரியா பவானி சங்கர். நேற்று திருவொற்றியூரில் ஒரு தனியார் அழகு நிலையத்தை துவக்கி வைக்க வந்தவர், அங்கு நிருபர்களிடம் பேசும்போது "சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது சகஜம்தான், நாம்தான் அதை சமாளிக்க வேண்டும்" என்றார். அவர் மேலும் கூறியதாவது
எல்லா துறைகளிலும் இருப்பது போன்று தான் சினிமாவிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. அதுவும் பெண்கள் அதிக அளவில் இருக்கும் துறை என்பதால் சற்று கூடுதலாக இருக்கிறது. அப்படியான தொல்லைகளை ஏற்பதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது. ஸ்ரீரெட்டி கூறி வரும் பாலியல் புகாரில் எனக்கு உடன்பாடில்லை. அப்போது தவறுக்கு உடந்தையாக இருந்துவிட்டு இப்போது புகார் அளிப்பது நல்லதல்ல. என்றார்.