தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இரும்புத்திரை வெற்றியைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் விஷால். லிங்குசாமி இயக்கி வரும் இப்படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
'சண்டக்கோழி 2' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சில தினங்களுக்கு முன் முடிவுற்றது. இந்நிலையில், படக்குழுவில் பணியாற்றிய 150 கலைஞர்களுக்கு விஷாலும், லிங்குசாமியும் தனித்தனியே தங்க நாணயம் பரிசளித்து, விருந்தளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
மேலும் இயக்குநர் லிங்குசாமி, மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் நன்கொடை அளித்தார்.