பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பசங்க படத்தில் இயக்குனரானவர் பாண்டிராஜ். அதன்பிறகு வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க-2, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களை இயக்கினார்.
இந்த படங்களில் அவர் மூன்றாவதாக இயக்கிய மெரினா படத்தில் தான் சிவகார்த்திகேயன் அறிமுகமானார். அதன்பிறகு அடுத்தடுத்து சில ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராகி விட்டார் சிவகார்த்திகேயன்.
இதுகுறித்து பாண்டிராஜ் கூறுகையில், நான் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி விட்டேன். தேசிய விருது கூட வாங்கியிருக்கிறேன். ஆனபோதும், வெளியூர்களுக்கு செல்லும்போது என்னை இன்னும் மக்களுக்கு அடையாளம் தெரியவில்லை.
சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்தை இயக்கியவர் என்று தான் சொல்கிறார்கள். அந்த வகையில், நான் தான் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் ஒரு அடையாளம் கொடுத்தேன். ஆனால், மக்கள் மத்தியில் சிவகார்த்திகேயன்தான் எனக்கு முகவரியாக இருந்து வருகிறார் என்கிறார் பாண்டிராஜ்.