‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரேமம் படத்தில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தமிழில் அறிமுகமான படம் தியா. ஏ.எல்.விஜய் இயக்கிய இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக செளரியா நாயகனாக நடித்திருந்தார். அந்த படம் வெளியான நேரத்தில் சாய்பல்லவி தன்னுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை மதிப்பதில்லை. அவருக்கு ஈகோ அதிகம் என்று பேட்டிகளில் கூறி வந்தார் நாக செளரியா. இதனால் அதன்பிறகு சாய்பல்லவியுடன் நடிப்பதற்கு மற்ற தெலுங்கு நடிகர்கள் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நாக செளரியா அளித்த ஒரு பேட்டியில், மீண்டும் சாய் பல்லவியுடன் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தியா படத்தில் சாய் பல்லவிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இனிமேல் அந்தமாதிரியான கதையில் நடிக்க மாட்டேன்.
ஹீரோவுக்கும் முக்கியத்துவமுள்ள நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக மீண்டும் சாய் பல்லவியுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் நாக செளரியா.