'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
சமந்தா நடிப்பில் செப்டம்பர் 13-ந்தேதி மூன்று படங்கள் திரைக்கு வருகிறது. அதாவது சீமராஜா, யுடர்ன் ஆகிய படங்கள் தான் இதுவரை சமந்தா நடிப்பில் வெளியாகும் படங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இப்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து அவர் நடித்த படம், நெஞ்சமெல்லாம் பல வண்ணம் என்ற பெயரில் தமிழில் செப்டம்பர் 13-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், 2018ம் ஆண்டு ஆரம்பத்தில் தனது நடிப்பில் வெளியான மூன்று படங்களுமே வெற்றி பெற்ற நிலையில், வரப்போகிற படங்களும் வெற்றிபெறும் என்று கூறும் சமந்தா, அடுத்தபடியாக நடிப்பதற்கு தற்போது தீவிரமாக கதைகளை கேட்டு வருகிறாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், எந்த கதையை கேட்டாலும் அந்த கதையை சொல்பவர் யார் என்பதை நான் கருத்தில் கொள்வதில்லை. கதையே கேட்கும்போதே அந்த கதாபாத்திரம் என் மனதில் ஓடத்தொடங்கி அதில் நான் பயணிக்கத் தொடங்கிவிட்டால் அந்த கதையை ஓகே செய்து விடுகிறேன்.
அந்த கதாபாத்திரம் குறித்து எனக்கு தோன்றும் சந்தேகங்களை இயக்குநர்களிடம் கேட்பேன். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சரியாக இருக்கும்பட்சத்தில் இன்னும் அந்த கதையில் ஈடுபாடாகி விடுகிறேன் என்கிறார் சமந்தா.