ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் சீசன் 2' நிகழ்ச்சியில் 66 நாட்களுக்குப் பிறகு 'வைல்டு கார்டு என்ட்ரி' நிகழ்த்தப்பட்டுள்ளது. 'சென்னை 28 முதல் பாகம், இரண்டாம் பாகம், அஞ்சாதே, சரோஜா, வெண்ணிலா வீடு' போன்ற படங்களில் நடித்த விஜயலட்சுமி தான் வைல்டு கார்டு நுழைவாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இது பற்றிய அறிவிப்பை டுவிட்டரிலேயே வெளியிட்டுவிட்டார்கள்.
கடந்த சீசனில் 35வது நாளில் நடைபெற்ற வைல்டு கார்டு நுழைவு இந்த சீசனில் 67வது நாளில் நடைபெறுவது ஆச்சரியமாக உள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் 33 நாட்களே உள்ள நிலையில் இப்போது எதற்கு வைல்டு கார்டு நுழைவு என ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
'நாயகி' தொடரில் நாயகியாக நடித்து வந்த விஜயலட்சுமி திடீரென அந்தத் தொடரிலிருந்து விலகினார். அதற்கான காரணத்தை விலகிய போது அவர் சொல்லவில்லை. ஒருவேளை 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காகத்தான் அவர் விலகினாரா என்பதும் தெரியவில்லை. ஒரு குழந்தைக்குத் தாயான பின் ஒரு வயதான குழந்தையை விட்டுப் பிரிந்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் விஜயலட்சுமி கலந்து கொள்வதின் காரணமும் புரியாத புதிர்தான்.