பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
"வழக்கு எண் 189, ஆதலால் காதல், செய்வீர், ஜன்னல் ஓரம்" போன்ற படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். சமீபத்தில் வெளியான ஒரு குப்பை கதை படத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி வரும் மனிஷா கூறியதாவது :
முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்கள் படம், அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி. இந்தப்படங்கள் வாயிலாக மொத்த சினிமாவையும் கற்று கொண்டேன். “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்து கொண்டேன்.
முன்பிருந்தே தமிழ் பேசுவேன், இப்போது பிழையில்லாமல், தைரியமாக பேசுகிறேன். என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க விரும்புவதில்லை. நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்தேன். கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் என்கிறார்.