மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கேரளாவில் பெய்த பெருமழையும் அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளமும் ஏழை பணக்காரன் என எந்த பாகுபாடும் பார்க்காமல் சகலரையும் சந்தியில் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. நடிகர் ஜெயராமும் அவரது குடும்பமும் கூட இந்த சூழலுக்கு தப்பவில்லை.. சில நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு பகுதி ஒன்றில் காரில் சிக்கிய ஜெயராம் குடும்பத்தினர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து கொச்சி செல்லும்போதுதான் இந்த இக்கட்டில் சிக்கினாராம் ஜெயராம். அவரது வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு நிலைமை சீராகும் வரை செல்லமுடியாது என்பதால் ஜெயராம் குடும்பத்தினர் அருகிலிருந்த போலீஸ் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு தங்கியிருந்தபடியே அருகில் இருந்த நிவாரண முகாம்களுக்கு குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட ஜெயராம் அங்கிருந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருவதாக கூறியுள்ளார்.