துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சினிமாவில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை போட்டு லாபம் சம்பாதிப்பவர்களை விட, திறமையை மூலதனமாக வைத்து முன்னேறுகிறவர்கள் தான் அதிகம் ஜெயிக்கிறார்கள்.. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் கீதா கோவிந்தம் படத்தின் தயாரிப்பாளர் பன்னி வாஸும் அப்படி ஒரு நபர் தான்.. அந்த உண்மையை படத்தில் வெற்றி விழாவில் வெளிப்படுத்தினார் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜூ .
சுமார் 14 வருடங்களுக்கு முன் தில் ராஜு தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடித்திருந்த ஆர்யா படத்தின் பாலக்கோல் ஏரியா உரிமையை வாங்குவதற்காக தில் ராஜூவை சந்தித்தாராம் பன்னி வாஸ். அப்போது அவரின் ஆர்வத்தை பார்த்து அந்தப்படத்தின் மேற்கு கோதாவரி ரைட்ஸ் முழுவதையும் வாங்கிக்கொள்ளும்படி கூறினாராம் தில் ராஜூ.
அதற்கு சம்மதித்த பன்னி வாஸிடம் பாக்கெட்டில் இருந்த வெறும் 40 ரூபாயை மட்டும் அட்வான்ஸ் தொகையாக பெற்றுக்கொண்டாராம். அதன்பின் தனது திறமையால் வளர்ந்த பன்னி வாஸ் இன்று நாற்பது கோடி வசூலிக்கும் படத்தை தயாரிக்கும் அளவுக்கு தனது சக போட்டியாளராக வளர்ந்துவிட்டதை ஆச்சர்யத்துடன் நினைவு கூர்ந்தார் தில் ராஜூ.