600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் படவாய்ப்பு தருவதாக தன்னிடம் பாலியல் உறவு கொண்டதாக பல பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தற்போது, ரெட்டி டைரி என்ற பெயரில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் ஒரு புகாரை வெளியிட்டு தெலுங்கு சினிமாவில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.
கடந்த மாதம் தெலுங்கில் வெளியான படம் ஆர்எக்ஸ் 100. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பயல் ராஜ்புத். அந்த படத்தின் வெற்றி காரணமாக தற்போது புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர் ஒருவர், பயல் ராஜ்புத்தை தனது படத்தில் நடிக்க வைக்க, தன்னை அட்ஜெஸ்ட் செய்யுமாறு கூறியிருக்கிறார். ஆனால் பயல் மறுத்துவிட்டார். இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பயல் ராஜ்புத்.