ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பெரு வெள்ளத்தால் மாநிலத்தில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநில மக்கள் உதவி வருகிறார்கள். தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த மழை வெள்ளம் காரணமாக மலையாள திரையுலகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான 10 மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மாநிலமே பெரும் சோகத்தில் இருப்பதால் மக்கள் சினிமா கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள்.
இதனால் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிதாக இப்போதைக்கு படங்கள் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் முடிந்த படங்கள் முதலீட்டுக்கு வட்டி கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கிறார்கள்.
அடுத்தடுத்த வெளிவர இருந்த மம்முட்டி நடித்துள்ள ஒரு குட்ட நாடன் பிளாக், மோகன்லால், நிவின்பாலி நடித்துள்ள காயங்குளம் கொச்சுண்ணி, பகத் பாசில் நடித்துள்ள வரதன் உள்ளிட்ட படங்களிக் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஓணம் பண்டிகைக்குள் நிலமை சீராகாவிட்டால் ஓணம் பட வெளியீட்டிலும் மந்த நிலையே நீடிக்கும் என்று தெரிகிறது.