அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படம் வெளியாகி இரண்டு வார இடைவெளியில் அவரது இன்னொரு படமான இமைக்கா நொடிகள் படம் வெளியாகவிருக்கிறது. 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இமைக்கா நொடிகள்'.
இப்படத்தில் அஞ்சலி என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் நயன்தாரா. சைக்கோ மற்றும் சீரியல் கில்லராக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யாப் நடித்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இளம் காதலர்களாக அதர்வாவும், ராஷிகண்ணாவும் நடிக்கின்றனர். நயன்தாராவின் கணவராக, கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
'கேமியோ பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மொத்தமாக வாங்கி தமிழகம் முழுக்க வெளியிடுவதாக ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால் பண நெருக்கடி ஏற்பட்டதால் இமைக்கா நொடிகள் படத்தை திருப்பிக் கொடுத்துவிட்டது. எனவே இந்த படத்துக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.
இரண்டு வருடகால தயாரிப்பாக கிடப்பில் கிடந்த இமைக்கா நொடிகள் படத்தின் அனைத்து பஞ்சாயத்துகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இமைக்கா நொடிகள் படத்தை இம்மாதம் 30-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்குள் வேறு பிரச்சனை உருவாகாமல் இருக்க வேண்டும்.