'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் டிவிக்களில் இப்படி ஒரு நிகழ்ச்சியா என வியக்க வைத்த நிகழ்ச்சியாக 'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சி இருந்தது. ஒரு வருடம் கழித்து 'பிக் பாஸ் 2' சீசன் ஒளிபரப்பு ஆரம்பமானதும், முதல் சீசனை விட பிரமாதமாக இருக்கும் என நேயர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் சீசனை விட சரியான போட்டியாளர்கள் இல்லாததால் நிகழ்ச்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் யாரையாவது நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றி, ஒருவரை 'சேவ்' பண்ண வைப்பார்கள். இப்போது 'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியை 'சேவ்' பண்ண யாராவது வரமாட்டார்களா என நேயர்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த விதமான விறுவிறுப்பும் திருப்பமும் இன்றி கடந்த 64 நாட்களாக நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது. இதுவரையில் 'வைல்டு கார்டு என்ட்ரி' என யாரும் நுழையவுமில்லை என்பதும் கேள்வியை எழுப்பியுள்ளது.
கமல்ஹாசன் வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளாவது சுவாரசியமாக இருக்கும் என்ற நிலையும் மாறி அந்த நாட்களும் பொறுமையைச் சோதிக்கும் நாட்களாகி வருகிறது. நேற்றும், முன் தினமும் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் கூட எந்த வித சுவாரசியமும் இல்லாமல் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த போட்டியாளர் வெளியேறப் போகிறார் என்ற ஒரு சுவாரசியம் மட்டுமே நிகழ்ச்சியில் இருக்கிறது.
இன்னும் 36 நாட்களே இருக்கும் நிலையில் இதற்கு மேலும் 'வைல்டு கார்டு என்ட்ரி'யில் யாராவது புதிதாக வந்து போட்டியில் நுழைந்தாலும் அது நியாயமாக இருக்காது. நிகழ்ச்சியின் மொத்த 100 நாட்களில் 3ல் 2 பங்கு நாட்கள் கடந்துவிட்டன. இதற்கு மேலும் அப்படி யாராவது நுழைந்தால் அவர்கள் போட்டியாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளராக மட்டுமே இருப்பதுதான் நியாயமாக இருக்கும். ஆனால், அப்படி எதையும் இதற்கு மேலும் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.
மீதமிருக்கும் 36 நாட்களையாவது ஏதோ ஒரு பரபரப்பைக் கிளப்பி நிகழ்ச்சியை ரசிக்க வைப்பார்களா என்பது தயாரிப்பாளர் குழுதான் முடிவு செய்ய வேண்டும்.