இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம், சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்க செயல்பாடுகள், நடிகர் சங்கம் கட்டடம், அடுத்து நடத்த வேண்டிய தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
நடிகர் நாசர் கூறியதாவது : நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கப்படும் என்பாதல் 6 மாதத்திற்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என அனைவரும் கூறுகிறார்கள். இதுகுறித்து சட்டப்படி முடிவு செய்வோம். நடிகர் சங்க தேர்தலில் இருந்து பின் வாங்கவில்லை. நாளையே தேர்தல் வைத்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்.
பொதுச் செயலாளர் விஷால் கூறுகையில், நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ரூ.20 கோடி தேவைப்படுகிறது. அதற்கு தேவைப்படும் நிதியை பல்வேறு முறைகளில் திரட்டப்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதத்துடன் எங்களுடன் பதவிகாலம் முடிவடைகிறது. அடுத்த பொதுகுழு கூட்டம் அங்கு தான் நடக்கும் என்றார்.
பொருளாளர் கார்த்தி கூறுகையில், தேர்தல் அறிவிக்கப்பட்டால் 3 மாதத்திற்கு செக்கில் கையெழுத்திட முடியாது என கூறினார்.
நடிகர் ஆனந்த் ராஜ் கூறுகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றக்கூடாது. தேர்தல் நடத்தக்கூடாது என்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார்.
எஸ்.வி.சேகர் கூறுகையில், நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டியது அவசியம். 80 களில் இருந்து உறுப்பினராக இருக்கும் என்னை நீக்கியது செல்லாது, என் உரிமைக்காக தான் இங்கு வந்தேன். கட்டடம் கட்டிவிட்டு தான் தேர்தல் நடத்துவோம் என சொன்னால் அதை ஏற்க முடியாது. தமது தலைமையிலேயே ஒரு அணி உருவாக வாய்ப்பிருப்பதாக கூறினார்.