'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
நாடோடிகள் பட நாயகி நடிகை அனன்யாவின் கொச்சின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அவர் அடைக்கலம் தேடி நடிகை ஆஷா சரத் வீட்டில் தங்கியுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால்,மக்கள் உணவு, உடையின்றி தத்தளித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிகள் வழங்க கோரி பல பிரபலங்களும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மலையாள நடிகை ரஷியா விஜயன் உதவி எண்கள் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்
350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகவும், பிரபலங்கள் பலர் தங்களது வீடுகளை விட்டு நண்பர்கள் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் தமிழில் நடோடிகள், எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அனன்யா, வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து உள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அனன்யாவின் வீடு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதால், பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா ஷரத்தின் வீட்டில் தங்கி இருப்பதாக நடிகை அனன்யா வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது உறவினர்களின் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது இதனால் என்ன நடக்குமெனத் தெரியவில்லை. எல்லாம் கடவுளின் கையில் உள்ளது என்று கூறியுள்ள அனன்யா ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற வேண்டும். என்றும் தனது குடும்பத்தினரை காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.