டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளா மாநிலத்தின் பெருவாரியான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பெரும்பாலான வீடுகள் தண்ணீரில் மூழ்கியிருப்பதால், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்த்திரையுலகைச்சேர்ந்த சூர்யா-கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து ரூ. 25 லட்சம் கேரளா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினர். அவர்களைத் தொடர்ந்து விஜயசேதுபதியும் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கிய நிலையில், ரஜினிகாந்த் ரூ. 10 லட்சம் நிதி வழங்கினார்.
அதன்பிறகு தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் ரூ. 10 லட்சம் தலா நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், நடிகர் விக்ரம் ரூ. 35 லட்சம் கேரளா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.