தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் சிலந்தி, கண்டேன் காதலை உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகர் முன்னா. தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவரது பெற்றோர் கேரளாவில் பூவஞ்சேரி என்கிற பகுதியில் வசிக்கின்றனர்.
சமீப நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் பெரு வெள்ளம் பூவாஞ்சேரியையும் விட்டுவைக்கவில்லை. அங்கிருக்கும் சர்ச் ஒன்றில் முன்னாவின் பெற்றோர் உட்பட பலர் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வந்ததாம்.
ஆனால் தானும் சென்னையில் இருக்கும் இந்த சமயத்தில், தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தனது பெற்றோரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர்களுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை என்றும் முகநூல் வீடியோ ஒன்றில் அழுகையுடன் பதிவு செய்துள்ளார் முன்னா.
நேற்று தந்தையின் பிறந்தநாள் என்பதை குறிப்பிட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ள முன்னா, தன் பெற்றோரை பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.