தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில் மழை வெள்ளத்தின் ஆக்கிரமிப்பிற்கு சினிமா நட்சத்திரங்கள் சிலரும் தப்பவில்லை. நடிகர் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் நிலச்சரிவு பகுதி ஒன்றில் சிக்கி மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சலீம்குமாரின் வீட்டையும் வெள்ளம் சூழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் கொடுங்கொள்ளுர் போகும் வாழையில் பரவூர் என்கிற நகரத்தில் தான் சலீம்குமார் வசித்து வருகிறார். நேற்று முன் தினமே அவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடம் செல்ல தீர்மானித்தாராம்.. ஆனால் அருகில் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் பலர் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்ததால், அவர்களுக்காக தானும் வீட்டிலேயே தங்கிவிட்டாராம் சலீம் குமார்.
ஆனால் நேற்று வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்து முதல் தளம் வரை மூழ்கிய நிலையில் சலீம்குமார் உள்ளிட்ட அனைவரும் மேல் தளத்திற்கு சென்றுவிட்டனர்.. சலீம்குமார் தனக்கு தெரிந்த சில மீடியாக்கள் வாயிலாக உதவி கோரி செய்தி அனுப்பியுள்ளாராம். இதுவரை அவர் மீட்கப்பட்டதா தகவல் எதுவும் வெளியாகவில்லை.