தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் வெளியான அபியும் அனுவும் படத்தில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது கேரளாவில் இருக்கும் இவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது வீட்டையே நிவாரண முகாமாக மாற்றியமைத்து உதவி செய்துள்ளார்.
கேரளாவில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் இவரது வீடு உள்ளது. இந்தப்பகுதியில் மழையின் தாக்கம் அதிகம் இருந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் மிகவும் குறைவு என கூறியுள்ள டொவினோ தாமஸ், வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்கள் தனது வீட்டில் தாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
நிலைமை சீராகும் வரை அவர்களுக்கான அடிப்படை தேவைகளை தானே செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த உதவியை பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரேனும் தயவுசெய்து தவறாக பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.