டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை காரணமாக கேரள மாநிலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகிறார்கள். தமிழ் திரைப்பட நட்சத்திரங்களும் நிதி அறிவித்து வழங்கி வருகிறார்கள். கேரள வெள்ள நிவாரணத்துக்காக சூர்யா - கார்த்தி சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த கார்த்தி அவரிடம் 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். கார்த்தியுடன், ராஜசேகர பாண்டியனும் உடன் சென்றார்.
மலையாள நடிகர் சங்கத்தின் வெள்ளி விழாவுக்காக சூர்யா 10 லட்சம் நிதி அளிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலை சந்தித்து அவரிடம் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் கார்த்தி. சூர்யாவுக்கும், கார்த்திக்கும் கேரளாவில் பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.